தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பலருக்கு பரிசு தொகைக்கான  டோக்கன் மறுக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இந்த ஆண்டு கிடைக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.