நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13,200 பேருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மார்ச் 25ஆம் தேதி இன்று முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.