ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ளகுலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வழிபட்டுள்ளார். அத்துடன், மக்களவைத் தொகுதியில் வெற்றிப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது பேசிய அவர், “ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.