பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நன்னாளில், 92 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மார்ச் 25ஆம் தேதி, திருமணம் ஆகாதவர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது கூடுதல் பலன் தரும்.