மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அதனை பின்பற்றி மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகல விலைப்படி உயர்வு சமீபத்தில் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல மாநிலங்களும் அகல விலைப்படி உயர்வை அறிவித்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு தான் அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் தேர்தலுக்குப் பிறகு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட மொத்தம் 46 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.