ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாவிகள் கலந்து கொண்ட போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியானது வெற்றி பெற்றது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், உலக கோப்பையில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர்கள் பாவிகள் கலந்து கொண்ட போட்டி தவிர அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். இந்த நிலையில் மம்தா பாலாஜி இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக ராகுல் காந்தியும் இதே போன்று தான் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.