டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

இந்த சம்பவம் நடந்ததையடுத்து, அங்கிருந்த சக மாணவ, மாணவிகள் பதறிப் போயினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் தாக்குதல் நடத்தியவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவரவில்லை.