சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து குழந்தையை தேடிய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் குழந்தை கண்டறியப்பட்டது.

அப்போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் இத்தகைய கொடுமையை செய்த 35 வயது நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.