இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.