திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம் அருகே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது