சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டுமென நான் நினைத்தேன். அதற்குள் கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர். பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால் தான் அரசியலில் இருந்து நான் விலகினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்..