தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, உணவில் உப்பை அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் நலம் பாதித்துவிடும் என கூறியுள்ளார்.

அரசியலுக்கு வராதது ஏன் என்று விளக்கம் அளித்து அவர், அதிக மது எடுப்பது கிட்னியை பாதிக்கும். அதிக எண்ணெய் உட்கொண்டால் இதயம் பாதிக்கும். ஆனால் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்த உடலமே பாதிக்கும். அதனால் சரியான அளவு எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.