இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் காண்போரை சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். அவ்வகையில் தற்போது வீடியோவில் பாம்பு ஒன்று தனக்கு இரைக்காக கொடுக்கப்பட்ட எலியை வேட்டையாட நினைத்து இறுதியில் ஏமாந்த காட்சி வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயம் கொள்வார்கள்.

இருந்தாலும் பாம்புகளும் மனிதர்களைப் போலவே அறிவாக செயல்படும் என்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் கோபத்தையும் வெளிக்காட்டும். அப்படி இங்கு பாம்பு ஒன்றுக்கு எலி ஒன்று இறையாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எலி பாம்பிடம் இருந்து தப்பித்துச் சென்று பாம்பை ஏமாற்றிய காட்சி தற்போது வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.