கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதனை பக்கெட் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டில் குழந்தை பிறந்து விட்டது. இதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை வீட்டில் கழிவறையில் உள்ள வாலி ஒன்றில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்களிடம் நடந்ததை அவர் கூறிய நிலையில் மருத்துவமனையில் இருந்த அதிகாரிகளிடம் அவர் நடந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் பக்கெட்டில் உயிருடன் இருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெற்ற பிஞ்சு குழந்தையை பக்கெட்டில் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணின் செயல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.