இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் என ஸ்மார்ட் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் அதிக விலை கொடுத்து தற்போது வாங்கப்படுகின்றன. அதன்படி 1990 ஆம் ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக அப்போது டி-ஷர்ட் மற்றும் ஷு-க்கள் ஆகிய ஆயிரக்கணக்கான பயன்பாட்டு பொருள்கள் தயாரிக்கப்பட்டது.

அப்போது தயாரிக்கப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் தற்போது சவுத் பை என்ற நிறுவனத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டது. இந்த பொருள்களை பெரும்பாலானோர் அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கிச் சென்றனர். அப்படி ஏலத்தில் விடப்பட்ட பொருள்களில் ஒரு ஜோடி ஷூ அதிக விலைக்கு ஏலம் போய் உள்ளது. அதாவது ஆப்பிள் ஜோடி ஷூ ஒன்றை 40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். ஆப்பிள் நிறுவன பொருட்களில் இந்த பொருள்தான் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.