தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது.  வர்தா புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை 2 நாட்களில் சீரமைத்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின் போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்தது. ஆனாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால், தற்போது புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக விமர்சனம் செய்துள்ளார்