முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர் என் ரவி அழைப்பு விடுத்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மசோதாக்கள் ஒப்புதலுக்கு தாமதம் குறித்த வழக்கில் இருவரும் பேச உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். புயல் நிவாரண பணிகள் மத்திய குழு ஆய்வுக்குப் பின் சந்திப்பதாக ஆளுநருக்கு முதல்வர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.