இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் 9 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது . இதில் மூன்று தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் பாஜக நேரடியாக மோத உள்ளன. அதன்படி கோவையில் கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக). தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை (பாஜக). நீலகிரியில் ஆ.ராசா(திமுக), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக), எல். முருகன் (பாஜக).