உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஒரு சில கல்லூரிகளிலும் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகளில் மாணவர்கள் தொடர்ந்து வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அரசு பள்ளிக்கூட வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களுடைய கவனம் சிதறி மதிப்பெண் குறைவதால் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.