சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள் ராமர் குறித்த விமர்சித்த காரணத்தால் அவரது தலையை வெட்டி சீவி வந்தால் எடைக்கு எடை தங்கம் தரப்படும் எனவும் அயோத்தியில் உள்ள சாமியார்கள் இந்த பரிசை வழங்குவார்கள் என பாஜக முன்னாள் எம் பி யும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி அறிவித்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது அதனைப் போலவே உதயநிதி பற்றி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.