தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்ப பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  www.tngsa.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களில் தங்கள் விண்ணப்ப வரிசையின் படி கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் கலோரி மாணவர் சேர்க்கை காண வழிகாட்டுதல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15 என்ற பெயரில் வங்கி வரை ஓலை மூலமாக அல்லது நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11ஆம் தேதி உடன் விண்ணப்ப பணிகளுக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.