உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி வழங்கப்படும் என அயோத்தி சாமியார் கூறி இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் தலையை சீவ பத்து கோடி எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதும் என அயோத்தி சாமியாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நான் பேசியதில் தவறே இல்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பேன், எந்த மதமாக இருந்தாலும் சரி அதில் சமத்துவம் இல்லை எனில் அது ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.