நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் சேகர்பாபு எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தார்கள், கணவர் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தது.

திமுகவால் தான் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, காலை உணவு திட்டம் மற்றும் பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக  ஆட்சி தான் கொண்டு வந்துள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.