மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் என்ற இடத்தில விதுர்நகரில் வியாழக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ரூப்சிங் ரத்தோருக்கும் பூஜா என்பவருக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய மருமகன் சுபம் ரத்தோருடன் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளார்.

இதனால் இவர்களுடைய கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ரூப்சிங்கை கொன்று அதை ஒரு விபத்து நடந்ததாக கூறி நாடகமாடியுள்ளார். விசாரணையில் ரூப்சிங் கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் சுபம், பூஜா மற்றும் ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.