விழுப்புரம் அருகே முதியோர் இல்லத்திலிருந்து 17 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள ‘அன்பு ஜோடி’ என்ற இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதை விசாரித்தபோது அங்கிருந்து 17 முதியோர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியாததால், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.