அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம், பி. வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.