ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெற இன்று  கடைசி நாள்  ஆகும்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இளங்கோவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதைப் பார்த்து இனி எதிர்காலத்தில் அதிமுகவும் பாஜகவும் தேர்தலில் போட்டியிடுவதே நினைத்துக் கூட பார்க்க கூடாது என அவர் கூறியுள்ளார்.