தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரக்கூடிய ராஷ்மிகா மந்தனா தன் நல்ல குணநலன்கள் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் பேட்டி அளித்ததாவது “நான் வாழ்க்கையில் சிறிய நல்ல விஷயங்களாக இருந்தாலும் அவற்றை கடைபிடிக்கிறேன். அதிகாலையில் எழுந்து சிறிது நேரம் வளர்ப்பு நாய்களுடன் விளையாடுவேன். நேரம் கிடைக்கும் வேளையில் நண்பர்களை சந்திப்பேன்.

இது போன்ற சிறிய விஷயங்களும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஒவ்வொரு நிகழ்வையும் டைரியில் குறித்து வைத்திருப்பேன். குடும்பத்திலுள்ள பெரியவர்கள் காலை தொட்டு தினசரி வணங்குவேன். அதுபோல் எங்களது வீட்டில் பணிபுரிபவர்கள் காலை கூட தொட்டு வணங்குவேன். காரணம் நான் மனிதர்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.