பிரபல போஜ்புரி நடிகை ஆகான்க்சா துபே (25). இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் நேற்று தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நடிகை ஆகான்க்சா தன்னுடைய 17 வயதில் மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு போஜ்புரி சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ள ஆகான்க்சா நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை ஆகான்க்சா பாடகர் மற்றும் நடிகரான சமர் சிங் என்பவரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய காதலை காதலர் தினத்தை முன்னிட்டு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.