இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொடர்பை கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும். இதனைப் போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவால் வேகம் எடுத்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு 100- ஐ கடந்துள்ளது. இதனால் இன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனையில் மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் கட்டுப்பாடு, அணிவது மற்றும் அபராதம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று மாலையே அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.