தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 12 பேரை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் அடங்குவர்.

மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுவிக்க நீதிபதி என் ஆதிநாதன் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. 264 பேரின் முன் விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 49 சிறைவாசிகளின் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதில் முதல் கட்டமாக 12 பேரை விடுவிக்க ஆர் என் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.