தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இந்த தேர்வு மூலமாக மாணவ சேர்க்கை நடைபெறுகின்றது.

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech படிப்புகளுக்கு சீட்டா தேர்வும் நடத்தப்படுகின்றது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.