பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில்  குஷ்பூ பாஜக அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொருத்தவரை அண்ணாமலை ஒரு சிங்கம். சட்டம் தெரிந்தவர். அதனால் அவர் எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை மாநில தலைவராக இருப்பதால், எந்த நேரத்தில் என்ன பேசவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.