குடிப்பதற்காக நாள்தோறும் ரூ. 650 கோடி செலவு செய்யும் மக்களுக்கு எதற்கு இலவசம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். திருவெறும்பூரில் பேசிய அவர், ‘ஒரு கையெழுத்து 2 மொழியில் போடும் ஈன இனம் நமது இனம் மட்டும்தான். தமிழனாக பிறந்தால் மட்டும் தமிழன் இல்லை, யார் இறுதிவரை உறுதியாக உழைக்கிறானோ அவன் தான் தமிழன். இனத்திற்கு அடிவிழும் பொழுது கொதித்து எழுபவன் தான் தமிழன்.

நாம் சிறைப்பறவைகள். சீமானை யாரும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாது. அப்படி போனால் எல்லாரும் போவோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி சிறந்தது என்பார். ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தில் ஆங்கிலத்தில், ஹிந்தியில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டுகள் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் இருக்காது என்றார்.