சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அதன்படி வரும் 15ம் தேதி முர்மு மருத்துவமனையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவ மனையை திறந்து வைக்க ஜனாதிபதி தரப்பில் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினே மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 5ம் தேதியே திறந்து வைப்பதாக இருந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதால், அவரால் இந்நிகழ்வுக்கு வர இயலாது நிலை உருவானது. இதனையடுத்து, இம்முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது