பொதுவாகவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் திரு விழாக்கள் மற்றும் மற்ற விசேஷமான நாட்களில்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்  ஆண்டுதோறும் ஜூன் 13 ஆம் தேதியன்று  இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  அ

ந்தவகையில் இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வரும் நடைபெறுவதை ஒட்டி, இன்று (ஜூன்13) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூன் 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.