இன்றைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்னையில் சுற்றுலா செல்பவர்கள் யாரும் பார்க்காத புதிய புதிய இடங்கள் இருப்பதை அறிவதில்லை. விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள இந்த இடங்களை சுற்றிப் பார்த்து வாருங்கள்.

முதலியார் குப்பம்:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இந்த இடம் அமைந்துள்ளது. சென்னையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இது திகழ்கிறது. சுற்றி பார்ப்பதற்கு இயற்கையான ஏறி இருப்பதுடன் அங்கு படகு பயணங்களும் மேற்கொள்ள முடியும். அதே சமயம் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகளும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கும் உள்ளது. பலவகையான படகுகள் உள்ள நிலையில் பயணிகள் தேவைக்கேற்ப அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதாவது எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு 3000 ரூபாய்
மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு 1150ரூபாய்
இரண்டு இருக்கைகள் கொண்ட விதி படகு 300 ரூபாய்.

முதலியார் குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளதால் பறவைகளை பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் இது திகழ்கிறது. எனவே இனி சுற்றுலா செல்ல விரும்பினால் இந்த பகுதிக்கு சென்று வாருங்கள்.