செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ED குறி வைத்துள்ளது. 2001-2006ல் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி, ED தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ED-க்கு சாதகமான உத்தரவு உ வந்தால், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல் என கூறப்படுகிறது.