தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 4 10 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த மூன்று நாட்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

எனவே வாகன ஓட்டிகள் இந்த நேரத்தில் நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும். காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை மற்றும் வடக்கு கோட்டை பக்கம் சாலை வழியாக பாரி முனையில் வந்து அடையலாம்.