கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

கோடாநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது எதிர்த்து ஓபிஎஸ் தலைமையில் தான் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார் கோடாநாடு பங்களா யாருக்கு சொந்தமானது என ஓபிஎஸ்-க்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார் மேலும் கோடாநாடு பங்களாவை அபகரிக்க தான் டிடிவி தினகரன் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.