ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. அந்த யானைக்கு கருப்பன் என பெயரிட்டனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் ஜோராக்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கருப்பன் யானையை பிடித்து மயக்கம் செலுத்தி ரேடியோ காலர் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.