தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தில் நடிப்பதற்கு நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகை திரிஷா 3 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக 2 கோடி வரை சம்பளம் பெற்று வந்த திரிஷா அந்தப் படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளார். மேலும் திரிஷாவின் ரசிகர்களோ 3 கோடி சம்பளம் என்பது அவருக்கு மிகவும் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.