தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான  கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.