வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளீட்டு ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.