தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 25 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் நாற்காலியில் அமர முடியாத சூழலில் சாய்ந்து விழுந்த காட்சி வெளியாகி பலரையும் கலங்க வைத்தது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சந்தித்த துரோகங்களால் தான் விஜயகாந்துக்கு சறுக்கல் ஏற்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரின் உடல்நல குறைவுக்கு மிக முக்கிய காரணம் என்றும் பிரேமலதா உருக்கமாக தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வலிகளை நானும் அவரும் எதிர்கொண்டோம் என கூறிய அவர், விஜயகாந்த் உடல்நிலை குறைவால் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.