உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் பீகாரில் மிக துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பகல்பூரில் வினீத் மற்றும் ஆயுஷி திருமணம் இன்று நடைபெற்றது. அதில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு ஆயுஷியின் நெற்றியில் வினீத் குங்குமம் இட்டார். அடுத்த சில நிமிடங்களில் மாரடைப்பால் வினீத் மயங்கிவிழுந்து யிரிழந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியில் ஆயுஷியும் மயங்கி விழுந்தார். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை இந்த சம்பவம் கண்ணீர்விட்டு அழ வைத்தது.