பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதிகாரிகளுக்கு பயந்து இவர் போனை விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள்  உடனடியாக அவரை கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கைதி வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டபோது வெளிநாட்டு துகள் இருப்பது தெரியவந்துள்ளது என சிறைக் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த கைதி மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.