அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது  கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் இன்றோடு முடிவடைகிறது. இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த முகாமில் திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக இணைந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்களை அறிவதற்கு 0417-5233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.