பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 10ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. டோக்கன் வழங்கப்படாதவர்கள் மற்றும் அரிசி அட்டைதாரர்கள் விடுபட்டு இருந்தால், இன்று (14ம் தேதி) அவர்களுக்கு வழங்கப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று மறக்காமல் உங்கள் பகுதியில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று பெற்று கொள்ளுங்கள்.