சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடல் பிகாரி வாஜ்பாய் விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வான நாகை பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு  கணினி பொறியியல் பயின்று வரும் மாணவி அருண்பிரியா கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அருண்பிரியாவை கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள், இணை செயலாளர் சங்கர் கணேஷ், கல்லூரி செயலாளர் செந்தில்குமார், நிர்வாக தலைவர் மணிகண்ட குமாரன், ஆலோசகர் பரமேஸ்வரன், கல்விசார் இயக்குனர் மோகன், உடற்கல்வி இயக்குனர் வேலவன், உடற்பயிற்சியாளர் சென்சாய், கராத்தே கதிரவன் முதல்வர் ராமபாலன் மற்றும் துணைத் தலைவர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டியுள்ளனர்.